
கணங்கள்தோறும்
ப்ரபஞ்ச இயக்கத்தின் உந்துசக்தியாய்
எதிர்பார்ப்புகளே முன்னிற்கின்றன.
மலரிதழில் தேனுறிஞ்ச காடெங்கும் அலைகிறது தேனீ.
கண்கள் விரியத் தனது எண்ணைத் தேடுகிறான் பள்ளி மாணவன்.
எதிர்காலக்கனவுகளோடு ஏறிஅமர்கிறான் மீசைஅரும்பிய சிறுவன்
திருவனந்தபுரம் நோக்கி விரைகிறது அம்பாசிடர் கார்.
கவிந்தமாலையில் பூச்சூடி கதவோரம்சாய்ந்து நிற்கிறாள் புதுமனைவி
இழந்த ராணியை மீட்க இறுதிக்கட்டம் நோக்கி நகர்கிறது செஸ் சிப்பாய்.
பாரதியின் சந்தத்தோடியைந்த எழுச்சிமிக்க வரிகளைப்போல்
ஒரு வரியாவது எழுதிடப் பசிகொள்கிறான் ஒரு புதுக்கவிஞன்.
"மச்சி நாளைக்கு இன்னேரம்லாம் ...."என்று
கண்களாலே சிரிக்கிறான் வெகேஷன் ஜானேவாலா தோஸ்த்.
மின்னல்கீற்றுகளுகிடையே நம்பிக்கைஒளியை
தலை உயர்த்திப்பார்க்கிறான் ஒரு விவசாயி.
அரங்கேற்றத்திற்காக அலங்கரிக்கப்படுகின்றன ஒரு ஜோடிக்கண்கள்.
சின்னச்சின்ன ஆசையுடன் ஏலேலோ
பாடத்தொடங்குகிறான் ஓர் இசைக்கலைஞன்.
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளித்தாலும்,
விதியின் பாதை
விழிகளுக்குத் தென்படாவிட்டாலும்,
என்றும் உள்ளுக உயர்வுள்ளல்...
No comments:
Post a Comment