Tuesday, 21 May 2013


வார்த்தைகளில்
முட்கள் கோர்க்கப்பட்டு
வீசப்படுகின்றன.
மாதவிடாய்க் குருதிபோல்
சொட்டுகிறது என் மனச்சீழ்.
என்னுள் ஊதப்பட்ட உயிர்க்காற்று
என் ஆத்மசுடரை அணையவிடாமல்
மேலும் மேலும்
ப்ரகாசிக்கச் செய்கிறது.
இறுதியில்
இரத்தமும் நிணமுமாய்
பனிக்குடத்திலிருந்து வெளிவரும்
சிசு போல
அவமானங்களை விட்டும்
காழ்ப்புகள் களைந்தும்
புதுப்பிறப்பெடுக்கிறேன்......

No comments:

Post a Comment